Last Updated : 16 Dec, 2023 06:20 AM

 

Published : 16 Dec 2023 06:20 AM
Last Updated : 16 Dec 2023 06:20 AM

ப்ரீமியம்
நூல் வெளி: கதையைத் தாண்டும் நரியின் பார்வை

வேலு சரவணன்

நம் தமிழ் மரபு, கதையாய கதைகளைக் கொண்டது. அந்தக் கதைகளைச் சொல்வதற்கு ஊர்களில் ஆச்சிகள் இருந்தார்கள். தோசைகளைப் பிய்த்துப் போட்டு வழி அறிவித்த ராசகுமாரிகளின் கதை, ஏழு கடல்... ஏழு மலை... தாண்டிய மந்திரக் கிளியின் கதை, கூடுவிட்டுக் கூடு பாயும் அரக்கனின் கதை என அந்தக் கதைகள் நமது கற்பனைக்குச் சிறகுகளைத் தந்தன. சிறு பிராயத்தின் மன வளர்ச்சிக்கும் கற்பனை ஆற்றலுக்கும் இந்தக் கதைகள் அவசியமானவை. அம்மாதிரியான சிறார் கதைகளின் தொகுப்புதான் ‘திபுலான் வாராதி’. நூலாசிரியர் வேலு சரவணன்.

நாவலாங்காடு என்னும் ஒரு காட்டூரில் ஒரு திருவிழா; முயல்களின் பூஞ்சிட்டுத் திருவிழா. இந்த நூல், இப்படிக் கோலாகலமாகத் தொடங்குகிறது. குட்டி முயல்கள் ஆறு மணல் குன்றுகளையும் திபுலான் யானையையும் தாண்ட வேண்டும். அதுதான் சடங்கு. தாண்டும் முயல்கள்தாம் பெரிய முயல்களுடன் வேட்டைக்குப் போக முடியும். இந்தப் பூஞ்சிட்டுத் திருவிழாவுக்காகக் காடே தயாராகிறது. புறா, விருந்து சமைக்கிறது. வெட்டுக்கிளியும் குரங்கும் முயல்குட்டிகளைச் சீவிச் சிங்காரிக்கின்றன. முயல்களின் தாய்மாமனான கலைமான், திபுலான் யானையை அழைக்கப்போன வாராதி குள்ளநரியை எதிர்பார்த்துப் பரபரப்போடு நிற்கிறது. பெரியவர்களின் ஒரு சடங்கை சிறியவர்களுக்காக மாதிரி செய்திருக்கிறார் வேலு சரவணன். அதே நேரம், இந்தச் சடங்கைச் சிறியவர்களின் உயரத்துக்கு இழுத்துள்ளார். இது இந்தக் கதைகளின் விசேஷமான அம்சம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x