Published : 21 Oct 2023 06:16 AM
Last Updated : 21 Oct 2023 06:16 AM
கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஆதி வேளாண் குடிகளான காராளர்கள், நில உரிமையாளர்களாக இருந்து, இன்று ரூபாய் நூறுக்கும் இருநூறுக்கும் உயிரைப் பணயம் வைத்துக் கூலி வேலை செய்பவர்களாக மாறியிருக்கும் வாழ்க்கைமுறை மாற்றத்தைப் பேசுகிறது இக்கதை. பல்வேறு விதமான சுரண்டல்களை எதிர்கொண்டு வாயற்ற சனங்களாக வாழப் பழகிவிட்ட இனத்தின் மூன்று தலைமுறைகளைப் பற்றியது இந்த நாவல்.
சுதந்திர இந்தியா உருவாக்கிய அரசமைப்பின் கீழ் வாழும் மனிதர்களாக மாறிய பின்னும் எவ்விதத்திலும் மாறிடாத வாழ்க்கைநிலை; கல்வி, அரசியல் என எந்த விழிப்பும் அணுகிவிடாதபடி, அறியாமையுடைய மனிதர்களாகவே அவர்களைப் பேணும் பெரும்பான்மைக்கான அதிகாரம்; இயற்கையோடு கூடிய வாழ்க்கைமுறையை, மதிப்பீடுகளைத் தொலைத்து நவீன வாழ்க்கையை அதன் தீமைகளோடு எதிர்கொள்ளத் தொடங்கிவிட்ட இச்சமூகம் கடந்து வந்திருக்கும் துயரார்ந்த சுவடுகள் எனப் பல்வேறு களங்களைக் கொண்டிருக்கிறது இந்தப் படைப்பு. சமதளத்து மனிதர்களான நாம் அறியாத பல சேதிகளைக் கொண்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT