Published : 11 May 2022 02:57 PM
Last Updated : 11 May 2022 02:57 PM

ப்ரீமியம்
உயிரை காக்கும் கை கழுவும் பழக்கம்: விளக்கும் உலக சுகாதார நிறுவன ஆய்வு அறிக்கை 

தடுப்பூசியால் நாம் கரோனா தொற்றை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் கரோனா தொற்று பரவ தொடங்கிய 2020 ஆண்டு மார்ச் மாதம் அனைத்து உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் கூறியது ஒன்றே ஒன்றுதான். முறையாக கைகளை கழுவினால் மட்டுமே கரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதுதான் அது. கரோனா தொற்றின் தொடக்க காலத்தில் அனைவரும் சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக எப்படி கைகளை கழுவ வேண்டும் என்று கற்றுத் தரும் அளவுக்குதான் தமது தனி நபர் சார்ந்த தூய்மையின் நிலை இருந்தது என்றால் அது மிகையல்ல. அவ்வாறு கைககளை கழுவுவது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட பழக்கங்களால் மட்டுமே முதல் கரோனா அலையை தடுக்க முடிந்தது. தற்போது இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு முடிவுகள் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் படி முறையாக கை கழுவும் பழக்கத்தால் 70 சதவீத நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x