Published : 13 May 2023 07:46 PM
Last Updated : 13 May 2023 07:46 PM

ப்ரீமியம்
கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் முதல் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 13, 2023

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய 'காங்கிரஸ்': கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் வெற்றியும், 18 இடங்களில் முன்னிலையும் பெற்றிருந்தது.

மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளும் போட்டியிட்டன.இவைகளுடன் 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி, 133 இடங்களில் (செய்தி பதிவு செய்யப்பட்டபோது இருந்த நிலவரம்) வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x