Published : 04 Sep 2017 10:52 AM
Last Updated : 04 Sep 2017 10:52 AM

‘மெய்சிலிர்க்க வைத்தது’ மத்திய அமைச்சர் கருத்து

மத்திய அமைச்சர் பதவிக்கு நான் தேர்வு செய்யப்பட்டது மெய்சிலிர்க்க வைத்தது என்று கேரள மாநிலத்தில் இருந்து மத்திய அமைச்சராக பதவியேற்ற கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கே.ஜே.அல்போன்ஸ் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கச் சென்றார்.

அப்போது, நிருபர்களிடம் கே.ஜே.அல்போன்ஸ் கூறுகையில், ‘‘மத்திய அமைச்சர் பதவிக்கு நான் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மகிழ்ச்சியான செய்தி. இது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. மிகவும் வியப்பளித்தது’’ என்று தெரிவித்தார்.

கேரளாவில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அதிகம் உள்ள தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு கே.ஜே.அல்போன்ஸ் வெற்றி பெற்றார். பின்னர், 2011-ல் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவையில் அல்போன்சுக்கு இடம் அளித்திருப்பதன் மூலம் கேரளாவில் கிறிஸ்தவ சமுதாயத்தினர் ஆதரவைப் பெற பாஜக வியூகம் வகுத்திருப்பதாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x