Published : 07 May 2024 10:35 AM
Last Updated : 07 May 2024 10:35 AM

3 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.57% வாக்குப்பதிவு

புதுடெல்லி: மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 10.57 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 14.6 சதவீதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 6.64 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு
மத்தியப் பிரதேசம் 14.22%
மகாராஷ்டிரா 6.64%
அசாம் 10.12%
பிஹார் 10.03%
சத்தீஸ்கர் 13.24%
கோவா 12.35%
குஜராத் 9.87%
கர்நாடகா 9.45%
உ.பி. 12.13%
தாதர் அண்ட் நாகர் ஹவேலி, டாமன் டியு 10.13%

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாவது கட்டத்தில் 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனிடையே இரண்டாவது கட்ட தேர்தலில் மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ்வேட்பாளர் அசோக் பலாவி உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் 3-வது கட்டத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 3-வது கட்டத்தில் ஒரு தொகுதி அதிகரித்து 95 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்குவங்கத்தில் மட்டும் ஓரிடத்தில் வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இத் தேர்தலில் களத்தில் 1300 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 120 பேர் பெண்கள். மேலும் வாசிக்க>> 3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x