Published : 24 Sep 2017 07:21 AM
Last Updated : 24 Sep 2017 07:21 AM
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான தங்கக் காசு ஹாரத்தை வெளிநாடு வாழ் இந்திய பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அரசு சார்பில் நேற்றிரவு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதனிடையே, வெளிநாடு வாழ் இந்திய பக்தரான எம். ராமலிங்க ராஜு என்பவர், 30 கிலோ எடையில் ரூ.11 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட தங்க லட்சுமி காசு பொதித்த ஹாரத்தை முதல்வர் மூலம் ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். இதை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் பெற்றுக்கொண்டார். இந்த ஹாரம் பிரம்மோற்சவ விழாவின்போது உற்சவரான மலையப்பருக்கு அலங்கரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT