Published : 25 Mar 2023 09:46 AM
Last Updated : 25 Mar 2023 09:46 AM
கண்மூடித் திறப்பதற்குள் இந்திய அரசியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய அவதூறு வழக்கு ஒன்றில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.இதையொட்டி, காட்சிகள் மாறி, எதிர்க்கட்சிகள் பலவும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பக்கம் நிற்கின்றன. இந்த சம்பவத்துக்கு இடையே எதிர்க்கட்சிகளில் சில காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணி அமைக்க தீவிரமாக முயன்று வருவதை கவனிக்க வேண்டியுள்ளது.
இந்த இடத்தில் பிரபல பத்திரிக்கையாளர் பிரேம் சங்கர் தனது கட்டுரையில் சொன்னது நினைவுகூரத்தக்கது. அவர், "வரும் 2024-ம் ஆண்டு வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சி உண்மையான உணர்வுடன், மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சர்வாதிகாரத்தை நோக்கிய மோடியின் ஆபத்தான நகர்வை முன்னிலைப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT