Published : 22 Sep 2017 08:46 AM
Last Updated : 22 Sep 2017 08:46 AM

மைசூரு தசரா விழா தொடக்கம்

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழா 408-வது ஆண்டாக நேற்று கோலாகலமாக தொடங்கியது. சாமுண்டீஸ்வரி கோயிலில் கன்னட கவிஞர் நிசார் அகமது காலை 8.45 மணிக்கு சிறப்பு பூஜை செய்து தசராவை தொடங்கி வைத்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மகாதேவப்பா சாமுண்டீஸ்வரிக்கு பூக்களை தூவி, நாடு செழிக்க வேண்டும் என வேண்டினர். மைசூரு அரண்மனையில் மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் அரச இருக்கையில் அமர்ந்து தர்பாரில் ஈடுபட்டார். தசரா விழாவை முன்னிட்டு 10 நாட்களும் கர்நாடகாவின் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இறுதிநாளில் வரலாற்று சிறப்பு மிக்க ஜம்பு சவாரி என அழைக்கப்படும் யானை ஊர்வலம் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x