Published : 22 Sep 2017 08:40 AM
Last Updated : 22 Sep 2017 08:40 AM

மேற்குவங்கத்தில் துர்கா சிலைகளை கரைக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

துர்கா சிலைகளை கரைக்க மேற்கு வங்க அரசு விதித்த தடையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.

நவராத்திரியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா சிறப்பாக நடக்கும். விஜயதசமியன்று வழிபாட்டுக்கு வைக்கப்படும் துர்கா சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். அக்டோபர் 1-ம் தேதி முகரம் பண்டிகை வருவதால் செப்டம்பர் 30-ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் துர்கா சிலைகளை கரைக்க மாநில அரசு தடை விதித்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் மாநில அரசின் தடையை நேற்று நீக்கியது. முகரம் பண்டிகை தினம் உட்பட எல்லா நாட்களிலும் இரவு 12 மணி வரை துர்கா சிலைகளைக் கரைக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசின் உத்தரவு ஒருதலைபட்சமானது என்று கூறிய நீதிமன்றம், துர்கா பூஜை ஊர்வலம், முகரம் ஊர்வலங்களை வேறுவேறு பாதைகளில் செல்ல ஏற்பாடு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x