Last Updated : 22 Sep, 2017 08:39 AM

 

Published : 22 Sep 2017 08:39 AM
Last Updated : 22 Sep 2017 08:39 AM

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் அமைச்சரை குறிவைத்து தாக்குதல்: இருவர் பலி, 6 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் அமைச்சரை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். 2 போலீஸார் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநில பொதுப்பணித் துறை அமைச்சராக இருப்பவர் நயீம் அக்தர். இவர் நேற்று காலை 11.45 மணியளவில் புல்வாமா மாவட்டம், ட்ரால் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அமைச்சரை குறிவைத்து தீவிரவாதிகள் கையெறிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அமைச்சர் நயீம் அக்தர் காயமின்றி தப்பினார். எனினும் அப்பாவி மக்கள் இருவர் உயிரிழந்தனர். இவர்கள் குலாம் நபி ட்ராக் (56), பிங்கி கவுர் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 2 போலீஸார் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

எல்லையில் பாக். தாக்குதல்

இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் 2 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் படையினர் நேற்று அதிகாலை மீண்டும் தாக்குதல் தொடங்கினர்.

ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் இந்திய எல்லைச் சாவடிகள் மற்றும் மக்கள் குடியிருப்புகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். பல வீடுகள் சேதம் அடைந்தன. 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.

கடந்த 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் உட்பட இருவர் இறந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x