Published : 27 Feb 2023 08:16 AM
Last Updated : 27 Feb 2023 08:16 AM

ஸ்கூட்டர் மீது மோதி 2 கி.மீ. இழுத்து சென்ற லாரி: உத்தர பிரதேசத்தில் தாத்தா, பேரன் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கான்பூர்-சாகர் நெடுஞ்சாலையில் மஹோபா என்ற இடத்தில் உதித் நாராயண் சன்சோரியா (67) மற்றும் அவரது பேரன் சாத்விக் (6) ஆகியோர் ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த ஒரு லாரி மோதி உள்ளது.

இதில் உதித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சாத்விக் மற்றும் ஸ்கூட்டரை 2 கிலோ மீட்டர் தூரம் லாரி இழுத்துச் சென்றுள்ளது. இதில் சாத்விக்கும் உயிரிழந்தான். விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் லாரி ஓட்டுநரிடம் தகவலை கூறுகின்றனர். அதை பொருட்படுத்தாமல் சென்றதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கற்களை வீசிய பிறகே லாரியை அவர் நிறுத்தி உள்ளார். பின்னர் ஓட்டுநரை பொதுமக்கள் தாக்கி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x