Published : 03 Sep 2017 10:44 AM
Last Updated : 03 Sep 2017 10:44 AM

திருமலை லட்டு தயாரிக்கும் கிடங்கில் தீ விபத்து

திருமலையில் உள்ள லட்டு தயாரிக்கும் கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சில மணி நேரம் லட்டு தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம், திருமலையில் உள்ள ‘போட்டு’ எனும் இடத்தில் தயாரிக்கப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருப்பர். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென பூந்தி தயாரிக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ஊழியர்கள் வெளியேறினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டில் லட்டு கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது இது 2-வது முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x