Published : 28 May 2016 10:44 AM
Last Updated : 28 May 2016 10:44 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு 2 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் 731 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு செய்து பாஜக.வினர் கொண்டாடினர்.
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம், பாஜக அரசு பொறுப்பேற்றது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பாஜக.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி சவுக் பகுதியில் பாஜக தொண்டர்கள் 731 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டுவை தயாரித்து கடந்த வியாழக்கிழமை கொண்டாடினர்.
இந்த லட்டுவை செய்வதற்கு 20 பேர் பணியாற்றி உள்ளனர். மேலும், பிரம்மாண்ட லட்டு தயாரிக்க 2 நாட்கள் ஆகியுள்ளன என்று கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான விஜய் கோயல் தெரிவித்தார்.
மத்தியில் மோடி பிரதமராக பதவியேற்ற பின், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கிலோ என்ற கணக்கில் 731 கிலோ லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் பொதுமக்களுக்கு ‘பிரசாதம்’ போல லட்டு விநியோகிக்கப் பட்டது. இந்த கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, பாஜக தேசிய துணைத் தலைவர் ஷியாம் ஜஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT