Published : 26 Apr 2016 09:25 AM
Last Updated : 26 Apr 2016 09:25 AM
பெண்களின் புனிதத்தன்மையை நிர்ணயிப்பது மாதவிலக்கா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில் முன்வைத்த வாதத்தில் இந்து மதத்தில் மட்டுமல்ல, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பெண் களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன. அதற்கு சட்டமும் அங்கீகாரம் அளித்துள்ளது. சபரி மலையில் தடை உத்தரவு அமல் செய்யப்படவில்லை. சில கட்டுப் பாடுகள் மட்டுமே பின்பற்றப்படு கின்றன என்று விளக்கம் அளிக்கப் பட்டது.
அப்போதுகோயில் நிர் வாகத்திடம் நீதிபதிகள், “சபரிமலைக்கு செல்ல ஆண் களுக்கு அனுமதி அளிக்கப் படுகிறது. பெண்கள் மட்டும் ஏன் செல்லக்கூடாது? பெண்களின் புனிதத்தன்மையை நிர்ணயிப்பது மாதவிலக்கா? அப்படியானால் ஆண்களின் புனிதத் தன்மையை எதை வைத்து தீர்மானம் செய்கிறீர்கள்” என்று அடுக் கடுக்கான கேள்விகளை நீதிபதி கள் எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க கோயில் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT