Last Updated : 17 Oct, 2015 12:43 PM

 

Published : 17 Oct 2015 12:43 PM
Last Updated : 17 Oct 2015 12:43 PM

டெல்லியில் சிறுமி பலாத்காரம்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

டெல்லியில் சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் இரண்டு மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "வெள்ளிக்கிழமை இரவு டெல்லி நங்க்லோய் பகுதியில் ராம்லீலா திருவிழா நடந்து கொண்டிருந்தது. இரவு 11 மணியளவில் திடீரென மின்சாரம் நின்றது.

அந்தவேளையில், சிறுமி ஒருவர் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் அச்சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

மோட்டார்சைக்கிள் விரைந்து சென்றதால் அங்கிருந்தவர்களால் அதை தடுக்க முடியவில்லை. உடனடியாக அப்பகுதி மக்கள் அச்சிறுமியைத் தேடிச் சென்றனர். ஆனால், அதிகாலையில் ஒரு பூங்காவில் அச்சிறுமி மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை தேடி வருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x