Published : 19 May 2020 07:56 PM
Last Updated : 19 May 2020 07:56 PM

தீவிரமடைகிறது உம்பன் புயல்: மேற்குவங்கம், ஒடிசா கடலோரப் பகுதிகளில் பலத்த மழை; எச்சரிக்கை

கொல்கத்தா

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கடும் சூறாவளிப் புயலால் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோரப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்க கடலில் மையம் கொண்டள்ள உம்பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா)வுக்கு 420 கீ.மீ தொலைவிலும், தெற்கு-தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 570 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென்-மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 700 கி.மீ தொலைவிலும் இன்று காலை 11.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது.

இது வங்கக் கடலின் வடமேற்குக்கு குறுக்கே வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடலோரப் பகுதியில் திகா(மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள்(வங்க தேசம்) அருகே சுந்தர்பன்ஸ் பகுதியில் மே 20ம் தேதி மதியம்/ மாலை அதி தீவிர புயலாக மணிக்கு அதிகபட்சம் 165-185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டோப்ளர் வானிலை ரேடார் மூலம் உம்பன் கடும் சூறாவளிப் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கடும் சூறாவளிப் புயலால் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோரப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதையொட்டியுள்ள மத்திய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதேபோல் வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிக்கும் மே 20ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மீன்பிடி பணிகள் அனைத்தையும் நாளை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பகுதிகளில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட வேண்டும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x