Published : 09 Aug 2015 11:23 AM
Last Updated : 09 Aug 2015 11:23 AM
வடக்கு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் சிலருடன் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக ராணுவம் நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “வடக்கு காஷ்மீரின் டாங்தார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் சிலரின் நடமாட்டத்தை கண்ட ராணுவ வீரர்கள், அவர்களை சரணடையு மாறு கூறினர். ஆனால் அவர்கள் அதை ஏற்காமல் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அங்கு இரு தரப்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் சேதம் குறித்த தகவல் தெரியவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT