Published : 01 Jul 2015 08:30 AM
Last Updated : 01 Jul 2015 08:30 AM

லஞ்ச வழக்கில் தெலுங்கு தேசம் எம்எல்ஏவுக்கு ஜாமீன்

தெலங்கானா மேலவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட் பாளருக்கு வாக்களிப்பதற்காக ரூ. 5 கோடி பேரம் பேசி, இதற்கு முன்பணமாக ரூ. 50 லட்சம் வழங்கிய தாக அக்கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி மற்றும் செபாஸ்டியன், உதயசிம்மா ஆகிய 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இதில் 4-வது குற்றவாளியாக கருதப்படும் மத்தையா தலை மறைவாக உள்ளார்.

இந்நிலையில் எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட மூவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏ ரேவந்த் ரெட்டிக்கு ரூ.5 லட்சம் பிணையத் தொகை மற்றும் 2 பேர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x