Published : 18 Jun 2015 08:39 AM
Last Updated : 18 Jun 2015 08:39 AM
மாநில பிரிவினை சட்டத்தின்படி, ஹைதராபாத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு ஆளுநரின் அதிகாரத் துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என ஆந்திர அமைச்சர வைத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடந்தது.
சுமார் ஆறரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், தெலங் கானா மேலவைத் தேர்தலில் லஞ்சம், தொலைபேசி ஒட்டுக் கேட்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தெலங்கானா லஞ்ச ஒழிப்பு துறையினரின் தொடர் நடவடிக்கைகள், தெலங்கானா அரசின் போக்கை எதிர்கொள்வது போன்ற பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. மாநில பிரிவினை சட்டத்தில் உள்ள பிரிவு 8-ஐ உடனடியாக அமல் படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, ஹைதராபாதில் சட்டம்-ஒழுங்கு ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருத்தல் அவசியம் என்றும் இல்லையேல் மாநில பிரிவினையே செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேலவைத் தேர்தல் விவகாரத்தில் தெலங்கானா அரசு முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பினால், ஆந்திரா வில், தெலங்கானா முதல்வர் மீது தொடரப்பட்டுள்ள 87 வழக்குகளில் நோட்டீஸ் அனுப்பவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
வரும் அக்டோபர் 22-ம் தேதி முதல், புதிய தலைநகரான அமராவதிக்கு கட்டிட பணிகளை மேற்கொள்வது, விஜயவாடா மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஆந்திர அமைச்சர்கள், முதன்மை செயலாளர் கிருஷ்ணா ராவ், காவல்துறை தலைவர் ராமுடு மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT