Published : 24 Jun 2015 02:01 PM
Last Updated : 24 Jun 2015 02:01 PM

ஜூன் 28-ல் மோடியின் அடுத்த ரேடியோ உரை

பிரதமர் மோடியின் அடுத்த ரேடியோ உரை வரும் 28-ம் தேதியன்று ஒலிபரப்பப்படுகிறது.

மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

அதன்படி, ஜூன் 28-ல் பிரதமர் மோடி வானொலியில் பேசவுள்ளார். இது பிரதமர் மோடியின் 9-வது வானொலி உரை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல்படுத்துவது குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x