Last Updated : 04 May, 2015 08:34 AM

 

Published : 04 May 2015 08:34 AM
Last Updated : 04 May 2015 08:34 AM

ஜார்க்கண்ட் விபத்தில் 10 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம், தியோகார் மாவட்டத்தில் நேற்று காலை வேனும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் திருமணக் குழுவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திருமண விழாவுக்குப் பிறகு மணமக்கள் உள்ளிட்ட 14 பேர் மோகன்பூர் அருகில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தியோகார் மாவட்டத்தின் டொமர்தார் அருகே வேனும் எதிரில் வந்த லாரியும் மோதிக்கொண்டன. இதில் மண மக்கள் உட்பட 10 பேர் இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் சதார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x