Published : 29 Jun 2019 12:30 PM
Last Updated : 29 Jun 2019 12:30 PM
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் தான் வசித்த பங்களாவை உடனடியாக காலி செய்தார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வதுமுறையாக பதவி ஏற்றது. பிரதமர் மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் சேர்ந்து 57 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். கடந்தமுறை வெளியுறவுத் துறையில் மிகவும் உற்சாகமாக, பாராட்டும் வகையில் செயல்பட்ட சுஷ்மா ஸ்வராஜ் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.
உலகின் எந்த நாட்டிலும் ஒரு இந்தியர் பாதிக்கப்பட்டு உதவி கேட்டு ட்விட்டரில் கோரிக்கை விடுத்தாலும் உடனடியாக அவர்களுக்கு உதவும் சுஷ்மாவின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சுஷ்மாவுக்கு உடல்நலன் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்ததால், அவர் தேர்தலில் போட்டியிட வில்லை. மேலும் அமைச்சரவையிலும் இடம்பெற விரும்பவில்லை. பதவி விலகிய அவர் உடனடியாக தான் வசித்து வந்த அரசு பங்களவை காலி செய்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘மத்திய அமைச்சராக இருந்த கடந்த 5 ஆண்டுகளாக புதுடெல்லி, சப்தர்ஜங் லேனில் 8-ம் எண் கொண்ட அரசு வீட்டில் வசித்து வந்தேன். தற்போது அந்த வீ்ட்டை காலி செய்து விட்டேன். நான் முன்பு தங்கியிருந்த வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்களில் என்னை தொடர்பு கொள்ள முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT