Published : 26 Mar 2017 04:17 PM
Last Updated : 26 Mar 2017 04:17 PM
கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெண் ஒருவருடன் அமைச்சர் சசீந்திரன் தவறாகப் பேசியதாக ஆடியோ டேப் ஒன்று வெளியானது. ஆனால், அந்த உரையாடலில் இடம்பெற்றிருப்பது தனது குரல் அல்ல என்று சசீந்திரன் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று தனது போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை சசீந்திரன் ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ''அமைச்சர் ராஜினாமாவுக்கு காரணமான ஆடியோ பதிவு குறித்து விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரம் தொடர்பாக சசீந்திரனிடம் ஆலோசித்துவிட்டு உரிய விளக்கம் அளிப்பேன்'' என்றார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 10 மாதங்களே ஆகின்றன. முன்னதாக, அரசுப் பணிகளில் உறவினர்களை நியமித்தது தொடர்பான விவகாரத்தால், கேரள தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் சசீந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT