Published : 20 Jun 2016 09:12 AM
Last Updated : 20 Jun 2016 09:12 AM
மகாராஷ்டிரா-தெலங்கானா எல்லையில் வெங்கடாபூர் பகுதி யில், 3 நக்ஸலைட்டுகள் பாது காப்புப் படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்துக்கு உட்பட்ட அஹேரி தாலுகா, வெங்கடாபூரில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட் டிருந்த காவல்துறையினர் மீது, நக்ஸலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
காவல்துறையினர் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில், 3 நக்ஸ லைட்டுகள் பலியாகினர். பலியான வர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை மற்றும் அடையாளம் காண்பதற்காக மாவட்டத் தலை நகரான கட்சிரோலிக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT