Published : 21 Sep 2016 08:28 PM
Last Updated : 21 Sep 2016 08:28 PM
வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் புதிய கட்சி போட்டியிடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகிய சித்து, சில நாட்களுக்கு முன் எம்எல்ஏ பர்கத் சிங், சுயேச்சை எம்எல்ஏக்கள் சிம்ரஜித் பெய்ன்ஸ், பல்விந்தர் பெய்ன்ஸ் ஆகியோர் இணைந்து ஆவாஸ் இ பஞ்சாப் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில், பஞ்சாப் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தலில் வெற்றி பெறுவதற்கு புதிய கட்சிக்கு குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படும். தற்போது தேர்தலுக்குத் தயாராவதற்கு குறுகிய கால அவகாசமே உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளைச் சிதறடிக்க விரும்பவில்லை. நாங்கள் போட்டியிட்டால் அது பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் அரசுக்கும், 15 ஆண்டுகளாக பஞ்சாபை சீரழித்த பாதல்-அமரிந்தர் ஆகியோருக்கும் ஆதரவாக மாறிவிடும். இது பஞ்சாபின் நன்மைக்காக மாற்றத்தைக் கொண்டு வரும் நமது நோக்கத்தை தோல்வியடைச் செய்து விடும்.
அரசியல் ஒரு தொழில் அல்ல திட்டம். தனிப்பட்ட முறையில் அரசியல் பழிவாங்கல் இல்லை. பஞ்சாபின் நன்மைக்காக கூட்டணிக்குத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT