Published : 21 May 2019 12:00 AM
Last Updated : 21 May 2019 12:00 AM

தெலங்கானா மக்களவை தேர்தலில் டிஆர்எஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என அனைத்து கருத்து கணிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி 17 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சி 13 தொகுதிகளிலும், காங்கிரஸ், பாஜ ஆகியவை தலா 1 தொகுதியிலும், மற்ற கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதேபோன்று, இந்தியா டுடே/ஆக்ஸிஸ் நடத்திய கருத்து கணிப்பில் டிஆர் எஸ் கட்சி, 10 முதல் 12 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 1 முதல் 3 வரை, பாஜ 1 முதல் 3 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கூறியுள்ளது. டுடேஸ் சாணக்கியா நடத்திய கணிப்பில் டிஆர்எஸ் கட்சி 14 தொகுதிகளில் வெற்றி பெறும் என அறிவித்துள்ளது.

மற்றவை தலா 1 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. எனவே தெலங்கானாவில் இம்முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x