Published : 09 Mar 2019 08:58 AM
Last Updated : 09 Mar 2019 08:58 AM
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இரு நாடுகளுமே பயன்படுத்தி நின்றுபோன தங்களது பேச்சுவார்த்தையைத் தொடரவேண்டும். இதன்மூலம் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும்.
பிரச்சினையை வாய்ப்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் மாற்றும் என்று சீனா நம்புகிறது.
இதன்மூலம் இரு நாடுகளிடையேயான நீண்ட காலத் திட்டங்கள், இரு நாட்டு உறவுகள் மீண்டும் மலரும் வாய்ப்பு உள்ளது. அண்டை நாடான இந்தியாவுடன் சீனா நட்பு பாராட்டவே விரும்புகிறேன். இந்தியாவுடனான உறவை மேலும் நெருக்கமாக்க சீனா விருப்பம் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும். இந்த பிராந்தியத்தில் வளமான எதிர்காலத்தை உருவாக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT