Last Updated : 23 Aug, 2018 09:47 AM

 

Published : 23 Aug 2018 09:47 AM
Last Updated : 23 Aug 2018 09:47 AM

கர்நாடகாவில் மழை குறைந்ததன் எதிரொலி: காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் 30 ஆயிரம் கன அடியாக குறைப்பு

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங் களில் கடந்த சில தினங்களாக கொட்டி தீர்த்த கனமழை நின்றுள் ளதால் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு 30 ஆயிரம் கன அடியாக‌ குறைக்கப் பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும், கபினி ஆறு உற்பத்தியாகும் வயநாட்டிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 பெரிய அணைகளும் நிரம்பி வழிந்தன.

எனவே கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளின் பாதுகாப்பை கருதி, காவிரியில் அதிகளவு தமிழகத்துக்கு நீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி நீர் அளவுக்கு கடந்த ஒரு வாரமாக நீர் திறக்கப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத னால் காவிரி கரையோர கிராமங் களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த இருதினங் களாக‌ குடகு, மைசூரு, வயநாடு (கேரளா) உள்ளிட்ட பகுதிகளில் மழை முற்றிலுமாக நின்றுவிட்டது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு குறைந்து அணைகளுக்கு வரும் நீரின் அள வும் வெகுவாக குறைந்தது. எனவே கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத் துக்கு திறக்கப்பட்ட‌ நீரின் அளவு, 15 நாட்களுக்கு பிறகு வெகுவாக குறைக்கப்பட்டது.

நேற்று மாலை 6 மணி நிலவரப் படி, மண்டியாவில் 124.80 அடி உயரமுள்ள‌ கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 120.20 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருக் கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மைசூரு மாவட்டத்தில் கபினி அணையின் நீர்மட்டம் 2,280 அடியாக உள்ளது. கேரளாவில் மழை நின்றுள்ள தால் அணைக்கு வரும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக குறைந்துள் ளது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 18 ஆயிரம்கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு விநாடிக்கு 30 ஆயி ரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் விநாடிக்கு 2 லட்ச கன அடி நீருக்கும் அதிகமாக சென்ற நீரின் அளவு, குறைக்கப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x