Published : 23 Aug 2018 08:54 AM
Last Updated : 23 Aug 2018 08:54 AM
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சி யின் பத்திரிகையான ‘சாம்னா’வில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். ‘இந்த விவகாரத்தில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கருத்தொற்றுமை ஏற்பட வேண் டும்’ என்று பாஜக சொல்வது, ‘காஷ்மீரில் நாங்கள் எதையும் செய்யவில்லை. அது இந்தியா வைச் சேர்ந்தது’ என்று பாகிஸ் தான் சொல்வது போல உள்ளது.
இதற்கு முன் இருந்த மத்திய அரசு ராமர் கோயில் கட்டுவது பற்றி கருத்தொற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த ஆட்சியை மக்கள் தோற்கடித்தனர். அதனால்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற முடிந்தது. இப்போது மெஜாரிட்டி பலத்துடன் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போதே ராமர் கோயில் கட்ட சட்டம் கொண்டுவர வேண்டும். அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ராமர் கோயில் பிரச்சினை தீரும்வரை காவி நிற தலைப்பாகையை பிரதமர் மோடி அணியக் கூடாது.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT