Published : 30 Aug 2018 11:59 AM
Last Updated : 30 Aug 2018 11:59 AM
பிஹார் மாநிலத்தில் புத்தர் ஞானம் பெற்ற புனிதத் தலத்தின் அருகே 15 சிறுவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக துறவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
சர்வதேச ஆன்மிக நகரமான புத்த கயாவின் அருகே உள்ள மாஸ்டிபூர் கிராமத்தில், பிரசன்னா ஜோதி புத்த பள்ளி மற்றும் தியான மையம் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடம் இயங்கிவருகிறது. அசாம் மாநிலத்தின் ஆங்லாங் மாவட்டத்தில் இருந்து 15 மாணவர்கள் இப்பள்ளியில் தங்கிப் படித்து வருகிறார்கள்.
கயா நகரத்தின் காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் தெரிவிக்கையில், ''புத்த துறவி, பாலியல் ரீதியாக தங்களிடம் தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டதாக மாணவர்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதன் பின்னர் உடனடியாகத் துறவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நகர துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஷா துறவியிடம் விசாரணை செய்து வருகிறார்.
மஹிலா தானா காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரி, மாணவர்களிடம் விசாரணை செய்துவருகிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் இவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள். துறவிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
புத்த கயா அருகே புத்த துறவியின் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பிஹார் மாநிலத்தில் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT