Published : 23 Aug 2018 09:03 AM
Last Updated : 23 Aug 2018 09:03 AM

கிருஷ்ணா நதியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் நேற்று, கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந் தனர்.

பக்ரீத் விடுமுறையையொட்டி, பள்ளி மாணவர்கள் சிலர் நேற்று காலை, குண்டூர் மாவட்டம், தாடேபள்ளி மண்டலம், குண்டி மெடா கிராமத்தில், பெருக் கெடுத்து ஓடும் கிருஷ்ணா நதியை காணச் சென்றனர். மொத்தம் 7 மாணவர்கள் நதியை கண்டு களித்துக்கொண்டிருந்தனர். அப் போது, இதில் 4 பேர் மட்டும் நதிக்கரை ஓரம் நீரில் இறங்கி குளிக்க முயன்றனர்.

அப்போது, பெருக்கெடுத்து வந்த வெள்ளம் இவர்கள் 4 பேரையும் அடித்து சென்றது. இதனைக் கண்டு சக மாணவர்கள் கூச்சலிட்டனர். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், அதில் சிலர், நதியில் இறங்கி மாணவர்களைத் தேடினர். இதற்குள் தீயணைப்பு படையினர், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்களும் மாணவர்களைச் சில மணி நேரம் தேடினர். ஆனால், நீரில் மூழ்கிய ஷிவா (14), கிராந்தி குமார் (10), நீலம் சிவா (8), தினேஷ் (7) ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு, குண்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

நீச்சல் தெரி்யாத காரணத் தினால் மீதமுள்ள 3 மாணவர்கள், தண்ணீரில் இறங்கவில்லை. இதனால் அவர்கள் உயிர் தப்பினர் என்பது தெரியவந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x