Published : 25 Jul 2018 07:45 AM
Last Updated : 25 Jul 2018 07:45 AM

புனே நகரிலிருந்து ஸ்பெயின் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தாயுடன் சந்திப்பு

ஸ்பெயின் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயை சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் புனே நகரில் நிகழ்ந்தது.

ஸ்பெயின் நாட்டில் சவுண்ட் இன்ஜினீயராக பணியாற்றி வருபவர் ஆன்டிக் மார்ட்டி ரமன் (56). இவரது மனைவி கரிகா படசியா (57). இந்த தம்பதியர் 22 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள ஸ்ரீவத்சா என்ற தொண்டு நிறுவனத்திடம் இருந்து 14 மாத பெண் குழந்தையை தத்து எடுத்தனர்.

ஜீனத் என்கிற மிரேயா என்ற இக்குழந்தை வளர்ந்து தற்போது 23 வயது இளம் பெண்ணாக உள்ளார். ஜீனத் தனது 10 வயதில் தனது பெற்றோரைச் சந்திக்க இந்தியா வந்தார். எனினும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

12-ம் வகுப்பு வரை படித்துள்ள ஜீனத், அடுத்து சைக்காலஜி படிக்க விரும்புகிறார். இவர் மீண்டும் இந்தியா வருவதற்கு பணம் சேமிப் பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி யுள்ளார்.

இந்நிலையில் வளர்ப்பு பெற் றோருடன் மீண்டும் இந்தியா வந் துள்ள ஜீனத் கடந்த சனிக்கிழமை தனது தாயை சந்தித்தார். ஜீனத்தை கட்டி அணைத்துக்கொண்ட அவரது தாய் அலீபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கண்ணீர் விட்டு அழுதார். வளர்க்க முடியாத தற்காக மன்னிப்பு கேட்டுக்கொண் டார்.

அலீபியாவுடன் உறவினர் ஒருவர் ஏற்படுத்திக்கொண்ட கட்டாய பாலியல் உறவினால் ஜீனத் பிறந்துள்ளார். அலீபியா கர்ப்பம் அடைந்த உடனேயே அந்த நபரும் குடும்பத்தினரும் அவரை கைவிட்டுவிட்டனர். இதை யடுத்து குழந்தையை வளர்க்க முடியாமல் தொண்டு நிறுவனத் திடம் ஒப்படைத்துள்ளார் அலீபியா. மீண்டும் திருமணம் செய்து கொள்ளாத அவர், தனது வாழ்க் கையை நடத்த வீட்டு வேலைக்கு செல்லத் தொடங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x