Last Updated : 25 Jul, 2018 07:55 AM

 

Published : 25 Jul 2018 07:55 AM
Last Updated : 25 Jul 2018 07:55 AM

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுடன் ஆலோசிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி திட்டம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் புதிய அணை கட்டுவது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணை கள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், கர்நாடக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ராம் நகர் மாவட்டத்தில் உள்ள மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட திட்டமிட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு புதிய அணை கட்ட உலகளாவிய ஒப்பந்த புள்ளிகளை கர்நாடக அரசு கோரியது. மேலும், இதற்கான திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து அணை கட்டுவதற்கு அனுமதிக் கோரி மத்திய அரசுக்கும் அனுப்பியது.

சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 67 டிஎம்சி நீரை தேக் கும் அளவுக்கு மேகேதாட்டு அணையை கட்ட முடிவெடுத் துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தில் முறையிட்டது. கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்ட அனுமதிக்க முடியாது’’ என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில தினங் களுக்கு முன்பு முதல்வர் குமாரசாமி, ‘மேகேதாட்டுவில் புதிய அணை கட்டப்பட்டும்’ என சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியதாவது:

“மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது முற்றிலும் நின்று விடும் என தமிழக விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை. ஆண்டுதோறும் கடலில் வீணாக கலக்கும் நீரை தேக்கி வைத்து, தமிழகத்துக்கு திறந்துவிடுவோம். இதனால் தமிழகத்துக்கு நீரும், மின்சாரமும் கிடைக்கும். எனவே, இத்திட்டத்தை தமிழகம் எதிர்க்கக் கூடாது.

இதுகுறித்து த‌மிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். விரைவில் சென்னை சென்று விவசாய சங்க‌ பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவேன். நல்ல மழை பெய்தால் இந்த ஆண்டைப் போல‌ அதிக நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவோம். நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தமிழக விவசாயிகளின் கஷ்டம் எனக்கும் தெரியும்” என குமாரசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x