Published : 28 Jun 2018 08:47 AM
Last Updated : 28 Jun 2018 08:47 AM
டெல்லியில் ராணுவ மேஜராக பணியாற்றியவர் அமித் திவிவேதி. இவரது மனைவி ஷாயில்ஸா, சில தினங்களுக்கு முன்பு டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில், அமித்தின் நண்பரும் ராணுவ மேஜருமான நிகில் ராய் ஹண்டா என்பவரே இந்தக் கொலையை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தலைமறைவாகி இருந்த அவரை போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர். அப்போது, ஷாயில்ஸாவுடன் தமக்கு தகாத உறவு இருந்ததாகவும், அதனைத் தொடர அவர் அனுமதிக்காததால் அவரை கொலை செய்ததாகவும் மேஜர் நிகில் ராய் வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், ஷாயில்ஸாவை தான் கொலை செய்ததை தமது நெருங்கிய தோழி ஒருவரிடம் நிகில் ராய் கூறியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT