Published : 17 Jun 2018 10:05 AM
Last Updated : 17 Jun 2018 10:05 AM

வீடுகளில் வேலை செய்யும்தொழிலாளருக்கு தனி சட்டம் - காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் அரவிந்த் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களுக்காக தேசியக் கொள்கை ஒன்றை மத்திய அரசு வடிவமைத்துள்ளது. ஆனால், இந்தக் கொள்கையில் உள்ள அம்சங்கள் யாவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. எனவே, அவற்றால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் ஒரு கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏழ்மை நிலையிலும், போதிய பணிப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, அவர்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் தனிச்சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்ற வேண்டும்.

அந்த சட்டமானது, வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கண்ணியமான பணிச் சூழலையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இந்தச் சட்டத்துக்கான வரைவு மாதிரியை மத்திய அரசுக்கு நாங்கள் அனுப்பியுள்ளோம். அதனை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x