Published : 08 Jun 2018 08:27 AM
Last Updated : 08 Jun 2018 08:27 AM

சரத் யாதவ் எம்.பி.க்கு சம்பளம் தரத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் சரத் யாதவ், அலி அன்வர் இருவரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் மாநிலங்களவை தலைவர் தகுதி நீக்கம் செய்தார். சரத் யாதவ் இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு எனது கருத்தை கேட்கவில்லை என கூறியிருந்தார். இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தகுதி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. அதேநேரம், சம்பளம் மற்றும் படிகளை வழங்கவும் அரசு இல்லத்திலேயே தங்கி இருக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து ஐஜத மாநிலங்களவை எம்.பி. ராமச்சந்திர பிரசாத் சிங் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரணைக்கு ஏற்ற, நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் அசோக் பூஷண் அடங்கிய விடுமுறை கால அமர்வு, சரத் யாதவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும்வரை சரத் யாதவுக்கு சம்பளம் மற்றும் படிகள் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டது. அதேநேரம் அரசு பங்களாவில் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x