Published : 18 Jun 2018 09:14 AM
Last Updated : 18 Jun 2018 09:14 AM
ஒடிசாவில் நேற்று முன்தினம் இடி, சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோர்தா மாவட்டத்தில் உள்ள காளிஜெய் கோயிலுக்கு சென்றுவிட்டு பலுகான் என்ற இடத்துக்கு சுற்றுலாப் பயணிகள் 18 பேர் சிலிகா ஏரியில் படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். பலத்த காற்று காரணமாக ஏரியில் படகு கவிழ்ந்தது. உள்ளூர் மீனவர்கள் 12 பேரை மீட்டனர். 2 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது. மேலும் 4 பேரின் உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டன. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT