Published : 08 Jun 2018 08:30 AM
Last Updated : 08 Jun 2018 08:30 AM
தொழிலதிபரை கடத்திய வழக்கில் அபு சலீமுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு டெல்லி தொழிலதிபர் அசோக் குப்தாவை கடத்தி, ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக மும்பை தாதா அபு சலீம் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அபு சலீம் குற்றவாளி என நீதிபதி தருண் செராவத் கடந்த மே 26-ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், தீர்ப்புக்கான இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அபு சலீமுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி செராவத் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சன்ச்சல் மேத்தா, மஜித் கான், பவன் குமார் மிட்டல் மற்றும் முகமது அஷ்ரப் ஆகியோரை, போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி நீதிபதி விடுதலை செய்தார். மற்றொரு நபர் சஜன் குமார் சோனி விசாரணையின்போது உயிரிழந்தார்.
மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அபு சலீம், இப்போது நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT