Published : 27 May 2018 09:42 AM
Last Updated : 27 May 2018 09:42 AM

சிறையில் ஆடை வடிவமைப்பு கற்கிறார் ஹனிபிரீத் இன்சான்

பாலியல் பலத்கார வழக்கில் சிறையில் உள்ள, தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகளாக கூறப்படும் ஹனிபிரீத் இன்சான், சிறையில் ஆடை வடிவமைப்பு பயின்று வருகிறார்.

சாத்விகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த 2017, ஆகஸ்ட் 25-ம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் இதற்கு எதிராக வன்முறை வெடித்தது. இதற்கான சதித்திட்டம் தீட்டியதாக ஹனிபீரித் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2017 அக்டோபர் முதல் அம்பாலா சிறையில் ஹனிபிரீத் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அம்பாலா சிறைக் கைதிகளுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்துடன் இணைந்து அங்குள்ள திறன் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இதில் ஆடை வடிவமைப்பு, பிளாக் பிரின்டிங் (ஆடைகளுக்கு அச்சு டிசைன் போடுவது), அழகுக் குறிப்புகள் ஆகிய 3 படிப்புகளை ஹனிபீரித் படித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதனை ஹரியாணா சிறைத் துறை ஐஜி ஜகஜீத் சிங் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் தண்டனை காலத்தை முடிக்கவுள்ள கைதிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். காலியாகவுள்ள இடங்களின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளுக்கு இடமளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x