Published : 30 May 2018 02:29 PM
Last Updated : 30 May 2018 02:29 PM
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் புதிதாக திருமணமான தம்பதி கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உயிரிழந்த நிலையில் மனைவியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கவலைக்கிடமான நிலையில் கணவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
கடந்த மே 24 அன்று எம்.லட்சுமி குமாரி (34), கே.பிரசாத் (42) ஆகிய இருவருக்கும் திருமணமானது. லட்சுமி குமாரி கம்யூட்டர் ஆப்பரேட்டராகவும் கணவர் ஆம்புலன்ஸ் டிரைவராகவும் பணியாற்றி வந்தனர்.
பிரசாத் ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்தவர். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.
ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் பிரசாத்தைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார். லட்சுமியின் உடல் உயிரிழந்த நிலையில் நீரில் மிதந்தது தெரியவந்தது.
புதியதாக திருமணமான நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு துணிந்தது ஏன் என தகவல் வெளியாகவில்லை. எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT