Published : 22 Apr 2018 09:01 AM
Last Updated : 22 Apr 2018 09:01 AM

கேரளாவில் காங்கிரஸ் தொண்டர் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் நிர்வாகிக்கு மரண தண்டனை

கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவை சேர்ந்தவர் காங்கிரஸ் தொண்டர் திவாகரன். கடந்த 2009 டிசம்பர் 9-ல் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கட்சி நிதிக்காக சேர்த்தலா பகுதியில் தரைவிரிப்புகளை விற்பனை செய்தனர். திவாகரன் வீட்டுக்கு அவர்கள் வந்தபோது மோதல் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த திவாகரன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் பகுதி செயலாளர் ஆர்.பைஜு, சுஜித், சதீஷ்குமார், பிரவீண், பென்னி, சேதுகுமா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆலப்புழா விரைவு நீதிமன்றம் வழக்கை விசாரித்து 6 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. பைஜுவுக்கு மரண தண்டனையும் இதர 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x