Published : 22 Apr 2018 09:06 AM
Last Updated : 22 Apr 2018 09:06 AM

உ.பி.யில் பரிதாபம்: பள்ளத்தில் கார் கவிழ்ந்து 7 பேர் பலி

உத்தரபிரதேசம், காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள பெஹராம்பூரைச் சேர்ந்த 13 பேர், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோடா பகுதியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். தேநீர் அருந்துவதற்காக காரைநிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார்.

அப்போது, காரில் இருந்த 5 வயது சிறுவன், வாகனத்தின் பிரேக்கை தவறுதலாக விடுவித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், கார் பின்பக்கமாக சென்று, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x