Published : 18 Feb 2018 02:38 AM
Last Updated : 18 Feb 2018 02:38 AM

சர்ச்சைக்குரிய குறும்படம் தொடர்பாக ராம்கோபால் வர்மாவிடம் விசாரணை

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிட்டது தொடர்பாக இயக்குநர் ராம்கோல் வர்மாவிடம் ஹைதராபாத் போலீஸார் நேற்று சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை இயக்கி வருபவர் ராம்கோபால் வர்மா. இவர், சமீபத்தில் ‘ஜிஎஸ்டி - காட், செக்ஸ் அண்ட் ட்ரூத்’ என்ற பெயரிலான குறும்படத்தை இயக்கி இணையதளத்தில் வெளியிட்டார். பாலியல் ரீதியான இந்தக் குறும்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. மேலும், இந்தக் குறும்படத்தை தடை செய்யக் கோரி பல மாநிலங்களில் மகளிர் அமைப்புகள் போராட்டமும் நடத்தி வருகின்றன. இதுதொடர்பான புகாரின் பேரில், ராம்கோபால் வர்மா மீது விஜயவாடா, ஹைதராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள் ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணைக்காக ஹைதராபாத் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராம்கோபால் வர்மா நேற்று ஆஜரானார். அப்போது அவரிடம் போலீஸார் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர் அங்கிருந்து திரும்பினார். இதனிடையே, ராம்கோபால் வர்மாவின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x