Published : 21 Feb 2018 07:21 AM
Last Updated : 21 Feb 2018 07:21 AM

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை லாக்கப்பில் இருந்து வெளியே இழுத்து வந்து கொன்ற கும்பல்

ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கைதாகி போலீஸ் காவலில் இருந்த 2 இளைஞர்களை 1,000 பேர் கொண்ட ஒரு கும்பல் வெளியே இழுத்து வந்து கொலை செய்தது. இந்த கோர சம்பவம் அருணாசல பிரதேச மாநிலம் தேஜு நகரில் நடந்தது.

தேஜு நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் சோபோர் (30). அவரது நண்பர் ஜெகதீஷ் லோகர் (25). இவர்கள் இருவரும் கடந்த 12-ம் தேதி தேஜு நகரில் வசித்து வந்த 5 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை தேயிலைத் தோட்டத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சஞ்சய், ஜெகதீஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேஜு நகரில் போலீஸ் நிலையத்துக்குள் 1,000 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.

லாக்கப்பை உடைத்து இருவரையும் வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர். தேஜு மார்க்கெட் பகுதிக்கு இழுத்துச் சென்று அவர்களை தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் இரண்டு பேரும் இறந்துவிட்டனர். இதுகுறித்து போலீஸ் விசாரணைக்கு முதல்வர் பெமா காண்டு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x