Published : 09 Feb 2018 07:45 AM
Last Updated : 09 Feb 2018 07:45 AM
காஷ்மீர் மாநிலம் சோபியானில் சமீபத்தில் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, ராணுவ மேஜர் ஆதித்யா குமார் உள்ளிட்ட சில ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஆதித்யா குமாரின் தந்தை கரம்வீர் சிங், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
சோபியான் பகுதியில் ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராணுவத்தினர் பல முறை எச்சரித்தும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ இளநிலை அதிகாரி ஒருவரை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டு கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். நிலைமை கை மீறி சென்றதால், கும்பல் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதற்காக, எனது மகன் மேஜர் ஆதித்யா குமார் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்திருப்பதை ஏற்க முடியாது. எனவே, ஆதித்யா குமார் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும், வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் கரம்வீர் சிங் தெரிவித்துள்ளார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT