Published : 08 Jan 2018 09:33 AM
Last Updated : 08 Jan 2018 09:33 AM

8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி

நாடு முழுவதும் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இப்போது 216 பெரிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி உள்ளது. 70 லட்சம் பேர் இதன் மூலம் இலவச இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், நாடு முழுவதும் கிராமப்புறங்கள் உட்பட 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ரூ.700 கோடியில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

முதல் கட்டமாக 1,200 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x