Published : 07 Nov 2023 05:44 AM
Last Updated : 07 Nov 2023 05:44 AM

பிளாட்பாரத்தில் ஏறிய அரசுப் பேருந்தால் 3 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்

விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடா அரசு பேருந்து நிலையத்தில் நேற்று 12-வது பிளாட்பாரத்தில் ஆட்டோ நகர் பணிமனையை சேர்ந்த பேருந்தை ஓட்டுநர் பின்னால் எடுக்க முயன்றார்.

அப்போது திடீரென முன்னால் இருந்த பிளாட்பாரத்தின் மீது ஏறியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒப்பந்த ஊழியர் வீரய்யா, பயணிகுமாரி மற்றும் 6 வயது ஆண் குழந்தை ஆகியோர் பேருந்தில் சிக்கி உயிரிழந்தனர். சுகன்யா எனும் பெண் படுகாயமடைந்தார். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாகமுதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x