Published : 30 Dec 2017 09:54 AM
Last Updated : 30 Dec 2017 09:54 AM

31 சாட்டிலைட்டை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

வரும் ஜனவரி 10-ம் தேதி 31 சாட்டிலைட்டுகளுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட் மூலம் 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1 செயற்கைக்கோளை சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. அந்த தோல்விக்கான காரணங்கள் ஆராயப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் அப்போது தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வரும் 10-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-40 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதில் 28 செயற்கைக்கோள்கள் பின்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவை என்று இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x