Published : 10 Nov 2017 09:10 AM
Last Updated : 10 Nov 2017 09:10 AM

நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றிய பெண்களை ஏமாற்றிய ‘பாகுபலி’ நடிகர் கைது

திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றியதாக பாகுபலி படத்தில் நடித்த நடிகரை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸுக்கு வளர்ப்பு தந்தையாக, ரோஹினியின் கணவராக நடித்தவர் வெங்கட பிரசாத். இவர் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் ஐமாக்ஸ் திரையரங்கின் மேலாளராகவும் பணியாற்றி வருகிறார். தெலுங்கில் சுமார் 40 படங்கள் நடித்துள்ளார்.

இவர் மீது 2009-ம் ஆண்டிலேயே முதல் மனைவி போலீஸில் புகார் அளித்தார். அதில் பிரசாத் கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். இவரை தொடர்ந்து, தற்போது திரையரங்கில் பணியாற்றும் ஒரு பெண்ணும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பிரசாத் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரசாத்தை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x